யாழ்.போதனாவில் இரு விடுதிகளை கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான விடுதியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது

20210604 121409
20210604 121409

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான இரு விடுதிகளும் நிரம்பியிருப்பதாக போதனா வைத்தியசாலை பதில் பணப்பாளர், வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்தராஜா, குறிப்பிட்டுள்ளார்

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது,

யாழ் போதனா வைத்தியசாலையில் புதிதாக 10 படுக்கைகள் கொண்டதாக கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக அவசர சிகிச்சை பிரிவு தற்போது அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

யாழ்.போதனா வைத்தியசாலையின் இரு விடுதிகளை கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான விடுதியாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில் இரு விடுதிகளிலும் நோயாளர்கள் நிரம்பியிருப்பதாக கூறியுள்ள பணிப்பாளர், மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும். என கேட்டிருக்கின்றார்.

மேலும் போதனா வைத்தியசாலையில் புதிதாக 10 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்