முல்லைத்தீவு மூங்கிலாறு சிவன் ஆலயத்தில் பரிவார மூர்த்தியாக பிரதிஷ்டை செய்யப்பட்ட பிள்ளையார் உடைத்து களவு

received 1192006711238781
received 1192006711238781

புதுக்குடியிருப்பு காவற்துறை பிரிவுக்குட்ப்பட்ட மூங்கிலாறு பகுதியில் உள்ள சிவன் ஆலயத்தில் பரிவார மூர்த்தியாக பிரதிஷ்டை செய்யப்பட்ட பிள்ளையார் உடைத்து   களவாடப்பட்டுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு காவற்துறையினர் முறைப்பாட்டினை பதிவு செய்ய  மறுத்ததாக ஆலய நிர்வாக தலைவர் தெரிவித்துள்ளார்

received 399878601485014 1

 மூங்கிலாறு பகுதியில் உள்ள சிவன் ஆலயத்தில் பிள்ளையார் இல்லாத காரணத்தினால் பிள்ளையார் சிலை ஒன்றை நிறுவியுள்ளனர் இந்நிலையில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டு பூசைகள் இடம்பெற்றுள்ளன 
இதனை தொடர்ந்து கடந்த 03-06-2021 அன்று ஆலய குருவை நித்திய பூசை செய்ய வேண்டாம் எனவும் ஆலயத்தை தொடர்ந்து பராமரித்து வரும் அயலவர்களை கோவில் பக்கம் செல்லவேண்டாம் என்று காவல் நிலைய பொறுப்பதிகாரி எச்சரித்த நிலையில் அன்று இரவே சிலை காணாமல் செய்யப்பட்டுள்ளது அன்று இரவு பிள்ளையார் சிலை உடைத்து களவாடி செல்லப்பட்டுள்ளது

received 4063720117041690

இந்நிலையில் ஆலய நிர்வாகத்தினர் புதுக்குடியிருப்பு காவல் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு செய்தபோது காவற்துறையினர் முறைப்பாடு செய்யாது திருப்பி அனுப்பியுள்ளனர் குறித்த விடயம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிலையில் நேற்று மாலை காவல் நிலையத்தில் முறைப்பாட்டினை காவற்துறையினர் பதிவு செய்துள்ளனர் இருப்பினும் முறைப்பாடு செய்ததற்கான எந்த ஆவணங்களையும் காவற்துறையினர் வழங்கவில்லை என தெரிவிக்கின்றனர் 

received 4047742715310735


இந்நிலையில் குறித்த சிலை உடைப்பு க்கு வேற்று மதத்தவரின் தூண்டுதல் காரணமாக காவற்துறையினர் உடந்தையாக செயற்படுகிறார்களா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது