மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு கடந்த 3 தினங்களான இதுவரையில் 79580 குடும்பங்களுக்கு 39 கோடியே 79 இலச்சம் ரூபாவை வழங்கியுள்ளதாக இன்று ஞாயிற்றுக்கிழமை (07) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.
அரசாங்கம் கொரோனா தொற்று காரணமாக போக்குவரத்து பயணக்கட்டுபாடு விதிக்கப்பட்டதையடுத்து வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற மக்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானித்து ஆரம்பித்து இடம்பெற்று வருகின்றது.
அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை வரையில் கடந்த மூன்று தினங்களில் 79580 குடும்பங்களுக்கு 39 கோடியே 79 இலச்சம் ரூபாவை வழங்கியுள்ளது என அவர் தெரிவித்தார்.