யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3600 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று 92 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 48 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. நல்லூர் மற்றும் உடுவில் பகுதிகளில் 3 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 5000 ரூபா கொடுப்பனவுக்காக கிடைத்த நிதியில் 59 ஆயிரம் குடும்பங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளன.பொதுமக்கள் சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர். தடுப்பூசி வழங்கும் முதற்கட்ட நடவடிக்கை நிறைவடைந்துள்ளது. 49 ஆயிரத்து 577 ஊசிகள் வழங்கப்பட்டுள்ளன. 2ஆம்கட்ட தடுப்பூசி எதிர்வரும் 10 ஆம் திகதியில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம் என யாழ்.மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.