யாழ்-கண்டி வீதியில் காவல்துறை விசேட சுற்றிவளைப்பு

download 1 1
download 1 1

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக யாழ்ப்பாணம் கண்டி பிரதான வீதியில் காவல்துறையினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் யாழ் குடாநாட்டில் பயணத் தடையினை மீறி வீதிகளால் அதிகமானோர் பயணிப்பதை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாண காவல்துறையினரால் தொடர்ந்து விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதோர் காவல்துறையினரால் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தனர்.

அது மாத்திரமின்றி அண்மைய நாட்களில் பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் திருட்டு சம்பவங்களும் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளதால் வீதியில் பயணிக்கும் சந்தேகத்துக்கிடமான வாகனங்களும் காவல்துறையினரால் சோதனையிடப்பட்டு வருகின்றது.

இந்த விசேட ரோந்து நடவடிக்கைகள் யாவும் யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையிலான காவல்துறை மோட்டார் சைக்கிள் அணியினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.