ஓட்டமாவடியில் 14 பேருக்கு கொரோனா

01 3 2 1
01 3 2 1

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 14 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்ட நிலையில் ஓட்டமாவடி பிரதேசத்தில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் வழிகாட்டலில் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய நபர்கள் 52 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்ற நிலையில் நேற்று மாலை கிடைக்கப்பெற்ற  பரிசோதனை முடிவின் படி 14 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.