மனைவியை கொலை செய்த கணவருக்கு 7 வருட சிறைத் தண்டனை

Judge saman
Judge saman

மனைவியை கொலை செய்த கணவருக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

2012ஆம் ஆண்டு கிளிநொச்சி – திருநகரில் யோகலிங்கம் பிரேமினி என்பவர் அவரது கணவனால் கொலை செய்யப்பட்டார்.

அதன் பின்னர் விசாரணைகளின் அடிப்படையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் 7 வருட கடூழியச் சிறைத் தண்டனையுடன் 5000 ரூபா தண்டப்பணமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

கொலை செய்யப்பட்ட பெண் 5 பிள்ளைகளின் தாயுமாவார்.