96 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள் கடற்படையினரால் மீட்பு!

01e6ecf3 9d72 4e77 a12d d7d013bf75e8
01e6ecf3 9d72 4e77 a12d d7d013bf75e8

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்கரையில் இன்று காலை 96 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. நாகர்கோயில் கடற்கரையில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு ரோந்துப் பணியின் போது கரையோரத்திற்கு அருகில் 3 சாக்குகளில் 96 கிலோ கிராம் கேரளகஞ்சா கண்டெடுக்கப்பட்டது. கடத்தல்காரர்களால் அவை கைவிடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கடற்படையினரால் மீட்கப்பட்ட கேரளகஞ்சா இன்று கடற்படையின் மேற்பார்வையில் வடக்கு கடற்படைத் தளத்தில் அழிக்கப்படஉள்ளது.