இந்தியத் தூதுவருடன் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச முக்கிய சந்திப்பு!

mahinda 1
mahinda 1

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச ஆகியோருக்கு இடையே இன்று முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இது, கடந்த ஒரு மாத இடைவெளியில் இருவரும் சந்தித்துக்கொண்ட இரண்டாவது சந்தர்ப்பமாகும். இலங்கை மற்றும் இந்தியாவின் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.