தனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து ஓமந்தையில் விபத்து!

IMG 20210608 WA0005
IMG 20210608 WA0005

வவுனியா ஓமந்தை பனிக்கன் நீராவிப்பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து ஒன்று இன்று அதிகாலை விபத்திற்குள்ளாகியது.

IMG 20210608 WA0002 1

குறித்த பேரூந்து வெளிநாடுகளில் இருந்து நாடுதி்ரும்பிய பயணிகளை அழைத்துக்கொண்டு கிளிநொச்சி பூநகரி தனிமைப்படுத்தல் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

IMG 20210608 WA0000

இதன்போது ஓமந்தை பனிக்கன் நீராவிப்பகுதியில் வீதிக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் மோதியதில் விபத்திற்குள்ளாகியது.

IMG 20210608 WA0002

விபத்தின் போது பேருந்தில் 7 பேர் பயணம் செய்த நிலையில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பாக ஓமந்தை காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்