ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பயணித்த பேருந்தை மறித்து திருப்பி அனுப்பிய மூவர் கைது

download 10
download 10

ஆடைத் தொழிற்சாலைகளை திறப்பதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புக்களை தெரிவித்து வரும் நிலையில் ஆடைத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா அதிகரிக்க காரணமாக இருந்த புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை மக்களின் எதிர்ப்புக்குக்கு மத்தியில் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

நேற்றைய தினமும் காலையில் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பயணித்த பேருந்தை மறித்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் உள்ளிட்ட பத்து பேர் புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்

இந்நிலையில் இன்றைய தினம் புதுக்குடியிருப்பு மற்றும் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்துகளை மக்கள் தடுத்து நிறுத்தி திரும்பி அனுப்பியுள்ளனர்

இந்நிலையில் குறித்த பேருந்துகளை திருப்பி அனுப்பிய மூன்று பேரை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.