நடமாடும் வங்கிச் சேவைகளை நடத்துமாறு மக்கள் கோரிக்கை

download 1 7
download 1 7

முல்லைத்தீவு மாவட்டத்தின் கிராம புறங்களுக்கு நடமாடும் வங்கிச் சேவைகளை நடத்துமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தொடர்ந்து நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில் நகர்புறங்களில் உள்ள வங்கிகளுக்கு செல்வது என்பது சவாலாக உள்ளதாகவும் கிராமப்புறங்களில் நடமாடும் வங்கிச் சேவைகளை நடத்துமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஏ ரி எம் இயந்திரங்களில் கூட பணம் எல்லா நேரங்களிலும் பெறக்கூடியவாறு இல்லை எனவும் சில வேளைகளில் பணம் முடிந்து விடுகிறது எனவும் தெரிவிக்கின்றனர்.