பதுளையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்!

202009290035497383 Tamil News Ticoplanin drug more effective corona virus IIT Delhis SECVPF 8
202009290035497383 Tamil News Ticoplanin drug more effective corona virus IIT Delhis SECVPF 8

தியத்தலாவை, பண்டாரவளை, எல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிகள் இன்றைய தினம் செலுத்தப்படவுள்ளன.

பதுளை மாவட்ட பொது சுகாதார சங்கத்தின் உப செயலாளர் சுப்பிரமணியம் சுதர்சன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தியத்தலாவை – பாலகதுருகம, பண்டாரவளை – எத்தளபிட்டிய, எல்ல – கித்தல் எல்ல ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 160 பேருக்கு இன்றையதினம் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.