மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 186 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இன்று புதன்கிழமை (09) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்து காங்கேயன் ஓடை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், கோறளைப்பற்று மத்தியைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்
அதேவேளை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் கீழ் உள்ள சுகதார வைத்திய அதிகாரி பிரிவுகளான மட்டக்களப்பில் 33 பேரும், களுவாஞ்சிகுடி 14 பேரும், வாழைச்சேனை; 05 பேரும், காத்தான்குடி 20 பேரும், கோறளைப்பற்று மத்தி 21 பேரும், ஓட்டமாவடி 31 பேரும், செங்கலடி ஒருவரும், ஏறாவூர் 27 பேரும்பட்டிருப்பில் 16 பேரும், வவுணதீவில் 03 பேரும், ஆரையம்பதியில் 03 பேரும், கிரான் 03 பேரும், காவல்துறை உத்தியோகத்தர் 03 பேரும், சிறைச்சாலையில் 07 பேர் உட்பட 186 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்