வடக்கில் மேலும் 55 பேருக்கு கொரோனா!

realistic coronavirus background 52683 35109 2
realistic coronavirus background 52683 35109 2

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களில் இருந்தும் மேலும் 55 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 31 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 05 பேரும், வவுனியா மாவட்டத்தில் 04 பேரும், மன்னார் மாவட்டத்தில் 09 பேரும். முல்லைத்தீவு மாவட்டத்தில் 06 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.