வவுனியாவில் சுகாதார பொருட்கள் கையளிப்பு

IMG 20210608 WA0021
IMG 20210608 WA0021

கியூமெடிகா அரச சார்பற்ற நிறுவனத்தினால் வவுனியா அரசாங்க அதிபரிடம் ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் கையளிக்கப்பட்டது.

நாட்டில் கொரோனா நோயாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு தரப்பினராலும் பல்வேறு வகையான உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் மற்றும் ஆயிரம் ரூபா பெறுமதியான 200 பொதிகள் “கியூமெடிகா ” அரச சார்பற்ற நிறுவனத்தினால் வவுனியா மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்டு மக்களுக்கு வழங்குவதற்காக வவுனியா பிரதேச செயலக அதிகாரிகளிடம் நேற்று (08) பொதிகள் கையளிக்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட அரசஅதிபர் சமன்பந்துலசேன, உதவி மாவட்ட செயலாளர் சபர்ஜா, கியூமெடிகா அரச சார்பற்ற நிறுவனத்தினர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.