தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ வடக்கு ஈச்சங்குளம் காட்டுப் பகுதியை அண்மித்த பகுதியில் யானையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த யானை சுமார் 30_35 வயது மதிக்கத்தக்க ஆண் கொம்பன் யானை என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இதேவேளை குறித்த யானையானது இரு வாரங்களுக்கு முன்னர் பன்றிக்கு வைக்கும் ஒரு வகை வெடியை உட்கொண்டு தொண்டையில் சிக்கியதால், உணவு உட்கொள்ள முடியாத நிலையில் உயிரிழந்திருக்கலாம் என வன ஜீவராசிக அதிகாரிகள் தெரிவித்தனர்.
யானையின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வனஜீவராசி அதிகாரிகளுடன் இணைந்து தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.