உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள்

img 9153 1200x550 1
img 9153 1200x550 1

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி அர்ஜுன ஒபேசேகரவை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க நாடாளுமன்ற சபை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதியினால் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சிசிர டி ஆப்ரூ ஓய்வு பெற்றதை அடுத்து நிலவிய வெற்றிடத்தை நிரப்புவதற்காக ஒபேசேகர பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.