முல்லைத்தீவு கோட்டைகட்டிய குளம் ,தென்னியம் குளம் போன்ற பிரிவுகளில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு தொழில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் நேற்றையதினம்(09) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
‘ஏர் நிலம் என்ற அமைப்பின் ‘ நிதி ஊடாக குறித்த உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது
குறித்த நிகழ்வில் பொதுமக்கள், குறித்த பகுதி கிராம அலுவலர், ஏர் நிலம் செயற்திட்டத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இந்த நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.