யாழில் மதுபானத்தை காவல்துறையினருக்கு விற்க முற்பட்ட ஒருவர் கைது

download 1 13
download 1 13

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் எனக் கூறி காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு விற்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகத்தைச் சேர்ந்த சந்தேக நபர், யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் வைத்து இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து 6 வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபருக்கு தொடர்பு எடுத்த யாழ்ப்பாணம் காவல்துறை புலனாய்வுப் பிரிவினர் வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் தேவை எனத் தெரிவித்து ஆறுகால்மடம் பகுதிக்கு அழைத்துள்ளனர்.

அவரும் அதிகளவு விலைபேசி 6 மதுபானப் போத்தல்களுடன் வருகை தந்து அவற்றை சிவில் உடையில் இருந்த காவல்துறை புலனாய்வுப் பிரிவினருக்கு விற்க முற்பட்ட போது கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் பயணித்த மோட்டார் சைக்கிளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.