அவுஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் கொரோனா கொத்தணி ஒன்று உருவானமைக்கு இலங்கையரிடம் இருந்து பரவிய கொவிட் வைரஸே காரணம் என்று கூறமுடியாது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன், வேறொரு நாட்டில் இருந்து இலங்கை ஊடாக மெல்போர்ன் நகருக்கு சென்ற ஒருவராலேயே குறித்த கொரோனா கொத்தணி உருவாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக மருத்துவர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்தார்.