5 இலட்சம் டொலர் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் தென்கொரியா

202005111438111642 Tamil News President warning Risk of Corona 2nd Wave in South Korea SECVPF
202005111438111642 Tamil News President warning Risk of Corona 2nd Wave in South Korea SECVPF

கொவிட்-19 தொற்றை ஒழிப்பதற்காக 5 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கு தென்கொரியா தீர்மானித்துள்ளது.

இலங்கைக்கான தென்கொரிய தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.

அவற்றில் பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் அடங்கியுள்ளதாக தென்கொரிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 ஒழிப்பிற்கான நடவடிக்கைகளின் போது இலங்கையுடன் நெருக்கமாக பணியாற்றவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் தென்கொரியாவினால் இலங்கைக்கு 3 லட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.