மதுபானப் போத்தல்களுடன் ஒருவர் கைது

kaithu
kaithu

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் எனக்கூறி காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு விற்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகத்தைச் சேர்ந்த சந்தேக நபர், யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் வைத்து நேற்று(11) பிற்பகல் 2.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து 6 வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.