மன்னாரில் மேலும் 20 பேருக்கு கொரோனா

DSC 2272
DSC 2272

மன்னார் மாவட்டத்தில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் போது 20 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (11) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

மன்னார் மாவட்டத்தில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் இன்று கிடைக்கப் பெற்றுள்ளது.இதன் போது 20 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் சமூகத்தில் நாள் ஒன்றிற்கு 4 நபர்கள் வீதம் இம்மாதம் 46 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இம்மாதம் 1784 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, மொத்தமாக 18 ஆயிரத்து 808 பீ.சி.ஆர். பரிசோதனைகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்