இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்

அருணாசல பிரதேசம் 750x375 1
அருணாசல பிரதேசம் 750x375 1

அருணாசல பிரதேசத்தில் உள்ள மேற்கு காமெங்கில் இன்று (11) அதிகாலை நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் தெரிவிக்கையில், ‘அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமெங்கில் இன்று அதிகாலை 4:53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது 3.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மலைப் பகுதியில் மண் சரிவும், வீடுகளில் விரிசலும் ஏற்பட்டுள்ளன.

ஆனால் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.