பொருளாதாரத்தை வலுப்படுத்தவே எரிபொருள் விலையேற்றம் – ஜனாதிபதி ஊடகப்பிரிவு

fu
fu

எரிபொருள் விலை அதிகரிப்பானது தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொது வேலைத்திட்டத்தின் ஒரு பிரதான காரணி மாத்திரமே என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த எரிபொருள் விலை அதிகரிப்பானது நாட்டின் வங்கி முறையை வலுப்படுத்தவும், குறைந்த வட்டி விகிதங்களை பராமரிக்கவும், அந்நிய செலாவணி செலவினங்களைக் குறைக்கவும், பரிமாற்ற வீதங்களை வலுப்படுத்தவும், சுகாதாரம் மற்றும் நலனைப் பாதுகாக்கவும், இறக்குமதியைச் சார்ந்த நுகர்வோர் பொருளாதாரத்தை உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட முதலீட்டு மற்றும் நுகர்வு பொருளாதாரமாக மாற்றவும் எடுக்கப்பட்ட முடிவாகும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்புக்கான பிரதான பல காரணிகள் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் பிரதமர் மற்றும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர்கள் ஆகியோரின் பங்குப்பற்றலுடன் நடந்த வாழ்க்கை செலவு குழு கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டதாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.