யாழ். நல்லூர் அரசடிப் பகுதி தனிமைப்படுத்தலிலிருந்து நாளை விடுவிப்பு

IMG 6e114017f78a2a8245033033dc5a033f V
IMG 6e114017f78a2a8245033033dc5a033f V

யாழ்ப்பாணம் நல்லூர் அரசடிப் பகுதியை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கடந்த 28ஆம் திகதி முதல் முடக்கப்பட்டுள்ள நிலையில் நாளை காலை விடுவிக்கப்படுகின்றது.

இந்த தகவலை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

நல்லூர் அரசடியில் கொவிட்-19 தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டனர்.

அதனால் அரசடியில் வசிக்கும் மக்களை சுயதனிமைப்படுத்துவதுடன் அந்தப் பகுதி கடந்த மே 28ஆம் திகதி முடக்கப்பட்டது.

இந்த நிலையில் நாளை காலை முதல் அரசடிப் பகுதி விடுவிக்கப்படுகின்றது.

அத்துடன், சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சாவற்காடு கிராமம் முடக்கப்பட்டுள்ளது.