மட்டக்களப்பில் கொரோனாவால் ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு

WhatsApp Image 2021 06 07 at 10.54.55 2
WhatsApp Image 2021 06 07 at 10.54.55 2

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே நாளான நேற்று மட்டும் கொரோனா தொற்றினால் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் இதுவரை மாவட்டத்தில் 70 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று (19) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்று மூன்றாவது அலை கடந்த ஏப்ரல் 22 ம் திகதி ஆரம்பித்த நிலையில் இதுவரை 61 பேர் உயிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியால் 70 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.