மட்டக்களப்பு கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமைகள்

WhatsApp Image 2021 06 19 at 09.46.15
WhatsApp Image 2021 06 19 at 09.46.15

மட்டக்களப்பு கிரான்குளம் கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகள் உட்பட டொல்பின் மீன் ஓன்றும் இன்று (19) கரையொதுங்கி உள்ளது. இது தொடர்பாக மீனவர்கள் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தனர்.

இதனையடுத்து அந்த பகுதிக்கு கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள், கடல் சுழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டதுடன் இறந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின் உள்ளிட்ட கடலாமைகளை பகுப்பாய்விற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர்.