மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலைய கட்டுமானப் பணிகள் நிறைவு!

windmill turbines produces power1 1200x794 1
windmill turbines produces power1 1200x794 1

மன்னாரில் அமைக்கப்பட்டுவரும் காற்றாலை மின் உற்பத்தி மையத்தின் நிர்மாணப்பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் ஊடாக இலங்கையின் புதுப்பிக்கக்கூடிய சக்திமூல மின்சார உற்பத்தி துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

100 மெகா வோல்ட் மின்சார உற்பத்தி இதன் மூலம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

இதிலிருந்து தேசிய மின்கட்டமைப்புக்கு வருடாந்தம் 380 மில்லியன் அலகுகள் மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.