பசறை, லுணுகலை கொலனிய பகுதியில் 2 கிலோவுக்கு அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் பசறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, விரைந்து வீடொன்றை சுற்றிவளைத்து சோதனைக்கு உட்படுத்திய போது விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 310 கிராம் கஞ்சா போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
இதன்போது, 39 வயதான நபர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை பதுளை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பசறை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்