போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது

kaithu
kaithu

கம்பஹா – பெம்முல்ல பகுதியில் போலி நாணயத்தாளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா காவல்துறை பிரிவுக்குட்பட்ட பெம்முல்ல பகுதியில் வர்த்தக நிலையமொன்றுக்கு வந்த நபரொருவர் 5000 ரூபாய் நாணயத்தாளை வழங்கி , அதற்கு பதிலாக சில்லரை காசுகளை பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த நாணயத்தாள் போலியானது என அறிந்துக் கொண்டுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர் அது தொடர்பில் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.