பண்டாரவளை காட்டுப் பகுதியொன்றில் தீ பரவல்

fire pic 10
fire pic 10

பண்டாரவளைப் பகுதியின் தோவை என்ற இடத்தில் சுமார் 15 ஏக்கர் காட்டுப் பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த தீயினால், காட்டுப் பகுதிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த சம்பவம், விசமிகள் சிலரின் திட்டமிட்ட செயலாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.