மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் கருவப்பன் சேனையில் உருக்குலைந்த நிலையில் யானை ஒன்றின் சடலம் காணப்படுவதாக பிரதேச வாசிகள் தகவல் தெரிவித்தனர்.
கருவப்பன்சேனையில் அமைந்துள்ள குளத்திற்கு அருகாமையிலேயே குறித்த யானையின் சடலம் காணப்பட்டுள்ளது.
அது இறந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என கிரான் வனஜீவராசிகள் திணைக்களம் தகவல் தெரிவிக்கின்றது.
கடந்த 09 ஆம் திகதியன்று குறித்த யானை இறந்துள்ளாகவும் அதன் உடல் பாகங்களின் மாதிரிகளை உடற் கூற்றாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.