கொழும்பு – வாழைத்தோட்டம் மற்றும் மருதானை பகுதிகளில் ஆளில்லா விமானம் மூலம் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆளில்லா விமானம் மூலம் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்புகளில், இதுவரை 143 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்