ஏறாவூரில் பொதுமக்கள் சிலரை முழந்தாளிட்ட இராணுவ வீரர் இருவருக்கு உடனடி இட மாற்றம்; விசாரணை ஆரம்பம்!

1 7
1 7

மட்டக்களப்பு ஏறாவூர் மிச்நகர் பகுதியில் இராணுவத்தினர் பொதுமக்கள் சிலரை சனிக்கிழமை (19) முழந்தாளிட்டு சம்பவவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாகவும் இரண்டு சிப்பாய்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக ஒழுக்ககாற்று விசாரணை நடாத்தப்படும் எனவும் இராணுவத்தளபதி தெரிவித்தார்

 ஏறாவூர் மிச் நபர் பகுதியில் பயணக்கட்டுப்பாட்டடை மீறிய சிலரை இராணுவத்தினர் பிடித்து வலுக்கட்டாயமாக முழந்தாளிட்டு கைகளை உயர்த்துமாறு உத்தரவிட்டனர் இந்த சம்பவம் புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் பரப்பாக பரப்பப்பட்டு பேசும் பொருளாக மாறியுள்ளது

 இந்த சம்பவம் தொடர்பாக குறித்த இராணுவத்தினருக்கு எதிராக ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் முழுமையான விசாரணைகள் முடிந்ததும் தவறு செய்த இராணுவத்தினருக்கு எதிராக கடுமையான ஒழுக்ககாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.