கொவிட் தொற்றால் மற்றுமொரு கர்ப்பிணி பெண் பலி!

samayam tamil 10
samayam tamil 10

கண்டி-மாவனெல்ல பகுதியில் கொவிட் தொற்று காரணமாக 30 வயதுடைய கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மாவனெல்ல வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

அண்மையில் அரநாயக்க தல்கஸ்பிட்டி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குறித்த கர்ப்பிணி பெண் சென்றுள்ளார்.

இதன்போது திடீர் சுகயீனம் காரணமாக கடந்த 21 ஆம் திகதி மாவனெல்ல வைத்தியசாலையில் குறித்த கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது பி.சி.ஆர் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல் ஊடாக தெரியவந்துள்ளது.