முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் ஆ.தவக்குமாரன் தலைமையில் இடம்பெற்று வருகின்றது
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலமைகளை அடுத்து முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த மாதம் முதல் முடக்க நிலையில் புதுக்குடியிருப்பு நகர் இருந்த காரணத்தால் கடந்த மாதம் கூட்டம் நடாத்த முடியாத நிலையில் கூட்டம் இடம்பெறவில்லை
இந்நிலையில் கொரோனா நிலமைகளை கட்டுப்படுத்தல் பிரதேச சபை அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆடைத் தொழிற்சாலை விவகாரம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள காடழிப்பு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது