700 கிலோகிராம் கோழி இறைச்சியை கொண்டு சென்றவர் கைது

Vavuniya 02
Vavuniya 02

மனித நுகர்வுக்கு தகுதியற்ற 700 கிலோகிராம் கோழி இறைச்சியை கொண்டுசென்ற குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று (22) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி 700 கிலோ கிராம் கோழி இறைச்சியினை கொண்டு சென்ற போது வவுனியா தெற்கு சுகாதார பொது பரிசோதகர்களால் குறித்த வாகனம் ஈரட்டை பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் கோழி இறைச்சி பமுதடைந்த நிலையிலும் பாதுகாப்பற்ற முறையிலும் இருந்ததனால் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக வவுனியா தெற்கு பொதுசுகாதார பரிசோதகர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.