வவுனியாவில் புதிய காவல் நிலையங்கள் திறந்துவைப்பு

IMG 3428 1
IMG 3428 1

வவுனியா சிதம்பரபுரம் ,நெளுக்குளம் பகுதிகளில் அமைந்துள்ள காவற்துறை காவலரண்கள் இரண்டும் காவற்துறை நிலையங்களாக தரமுயர்த்தப்பட்டு இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

IMG 3421

பொதுமக்கள் முறைப்பாடுகள் வழங்கும் செயல்முறையை இலகுவாக்குவதற்காக நாடு முழுவதும் 197 புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர் தெரிவித்திருந்தார்.

அந்தவகையில் வவுனியா சிதம்பரபுரம் மற்றும் நெளுக்குளம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள காவற்துறை காவலரண்கள் புதிய காவல் நிலையங்களாக தரமுயர்த்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

IMG 3471

நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து கொண்டிருந்த வடமாகாண சிரேஸ்ட காவற்துறை அதிபர்
சஞ்சீவ தர்மரத்தின புதிய காவல் நிலையத்தினை உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தார்.

நிகழ்வில் வன்னிமாவட்ட பிரதி காவற்துறை அதிபர் லால் செனவிரத்தின காவற்துறை அத்தியட்சகர் திஸ்சலால் சில்வா, வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி மானவடு, உட்பட காவற்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் வறுமை கோட்டிற்குட்பட்ட 20 குடும்பங்களிற்கு காவற்துறையினர் நிவாரண உதவிப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன்,மாற்றுவலுவுடைய சிறுவன் ஒருவருக்கு சக்கரநாற்காலியும் வழங்கி வைக்கப்பட்டது.

IMG 3497