நேற்றைய தினம் (22) இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகளவான தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகி உள்ளதாக கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் 364 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி இருந்தனர்.
நேற்றைய தினம் நாட்டில் மொத்தமாக 2,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் நேற்றைய தினம் தொற்றுக்கு உள்ளானவர்களுள் 22 பேர் வௌிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.