அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளதாக தெரிவிப்படுகின்றது.
துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே 650 என்ற விமானத்தின் மூலம் இன்று காலை 8.30 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவருடன், அவரின் மனைவி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க ஆகியோரும் அவருடன் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.