ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு சுகாதாரப் பிரிவினர் தடுப்பூசிகள் ஏற்றவில்லை

20200331 155051
20200331 155051

வடக்கு ஆடைத் தொழிற்சாலைகளுக்கு சுகாதாரப் பிரிவினருக்கு ஊடாக தடுப்பூசிகள் ஏற்றப்படவில்லை என வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களுக்கு இன்று (24.06) தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இது குறித்து அவரிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் எமக்கு ஊடாக ஏற்றப்படவில்லை. அவை நேரடியாக ஏற்றப்படுகின்றன. அவை இராணுவத்தினர் ஊடாக ஏற்றப்படுவதாக அறிகின்றேன் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, வவுனியா ஆடைத் தொழிற்சாலையிலும் தடுப்பூசிகள் ஏற்றப்படும் நிலையில் அது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என வவுனியா சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இராசேந்திரகுளம் ஆடைத் தொழிற்சாலையில் பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் லவன் அவர்களும் இராணுவத்தினருடன் இணைந்து தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கையில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.