காயம் எனக்கூறி ஹெரோயின் கடத்திய தம்பதியினர்!

1624528857 3047795 hirunews
1624528857 3047795 hirunews

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற தம்பதியினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தமது அதிசொகுசு ஜீப் வாகனத்தில் ஹெரோயினுடன் பயணித்தபோது அளுத்கம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 135,000 ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் கரன்னாகொட – நேபொட – வரகாகொட பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் குறித்த ஹெரோயினை 400 பக்கட்டுகளில் அடைத்து, அவற்றை வயிற்றில் வைத்து காயங்களுக்கு கட்டுப்போட்டுள்ளதைப் போன்று கடத்திச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.