பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற தம்பதியினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தமது அதிசொகுசு ஜீப் வாகனத்தில் ஹெரோயினுடன் பயணித்தபோது அளுத்கம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 135,000 ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் கரன்னாகொட – நேபொட – வரகாகொட பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் குறித்த ஹெரோயினை 400 பக்கட்டுகளில் அடைத்து, அவற்றை வயிற்றில் வைத்து காயங்களுக்கு கட்டுப்போட்டுள்ளதைப் போன்று கடத்திச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.