வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

IMG 20210624 191744
IMG 20210624 191744

வவுனியா மாவட்டத்தின் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் கடந்த மாதம் இனம் காணப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஆடைத் தொழிற்சாலை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வவுனியாவிலுள்ள ஹைராமனிக், ஒமேகாலைன் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசி இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா ஆடை தொழிற்சாலையில் சுமார் 3000 க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பணியாற்றி வருகின்றார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் இவர்களுக்கான கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் முதற்கட்ட செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆடை தொழிற்சாலை மீண்டும் இயங்குவதாயின் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் ஊழியர்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்து வந்திருந்தனர். இந்நிலையில் இன்றையதினம் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தடுப்பூசி ஏற்றுகின்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.