சீரற்ற காலநிலை – மூவர் உயிரிழப்பு

1 Rain 10 1
1 Rain 10 1

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 13 மாவட்டங்களில் 18 ஆயிரத்து 840 குடும்பங்களை சேர்ந்த 64 ஆயிரத்து 608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், 5 ஆயிரத்து 255 குடும்பங்களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 766 பேர் 132 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் இதுவரை 62 வீடுகள் முற்றாகவும் ஆயிரத்து 463 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.