மனித உரிமைகள் அமைப்பினர் என அடையாளப்படுத்தி நிதி சேகரித்த பெண் கைது!

201908230422499140 The ancestors stabbed the knife jewelry was seized woman was SECVPF
201908230422499140 The ancestors stabbed the knife jewelry was seized woman was SECVPF

மனித உரிமைகள் அமைப்பினர் என அடையாளப்படுத்தி வவுனியா – குட்செட் வீதியில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவற்துறையினருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அவரிடமிருந்து 6,500 ரூபா பணத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

சேகரிக்கப்பட்ட குறித்த பணத்தொகையில் 6 பேருக்கு சிறியளவிலான பணத்தொகை வழங்கப்படுவதுடன், எஞ்சிய நிதி அநுராதபுரத்தில் உள்ள பெண்ணொருவருக்கு வழங்கி வந்துள்ளமை ஆரம்ப விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.