மனித உரிமைகள் அமைப்பினர் என அடையாளப்படுத்தி வவுனியா – குட்செட் வீதியில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவற்துறையினருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அவரிடமிருந்து 6,500 ரூபா பணத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
சேகரிக்கப்பட்ட குறித்த பணத்தொகையில் 6 பேருக்கு சிறியளவிலான பணத்தொகை வழங்கப்படுவதுடன், எஞ்சிய நிதி அநுராதபுரத்தில் உள்ள பெண்ணொருவருக்கு வழங்கி வந்துள்ளமை ஆரம்ப விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.