கையூட்டல் பெற முயன்ற மூவர் கைது!

kaithu
kaithu

போதைப்பொருள் வர்த்தகத்தை தொடர்வதற்காக சிலாபம் மற்றும் சீதுவை பகுதிகளில் இரண்டு பேரிடம் கையூட்டல் பெற முயன்ற இராணுவ சிப்பாய்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, சிலாபம் – மையக்குளம் பகுதியில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவரிடம் கப்பம் கோரிய இரண்டு இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.