நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழை!

rain 23 1568876827 1
rain 23 1568876827 1

நாட்டில் இன்று(27) மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பிரதேசங்களில் 50 மில்லிமீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்று மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் வீசக் கூடும் எனவும், சில நேரங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக் கூடும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.