குருணாகல், உஹுமிய பிரதேசத்தில், மூடப்பட்டிருந்த சில்லறை விற்பனை நிலையமொன்றுக்குள் நிர்வாணமாக நுழைந்த நபரொருவர் பொருட்கள் சிலவற்றை திருடிச்செல்லும் காட்சி அங்கிருந்த சிசிரீவி கமராவில் பதிவாகியுள்ளது.
நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் குறித்த வர்த்தக நிலைய உரிமையாளரிடம் வினவியபோது, சுமார் 75 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் இதன்போது திருடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் வீரம்புகெதர காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.